புத்தளம் நெனசல  
 

இலங்கை அரசாங்கத்தினால் உலக அறிவூ கிராமத்திற்கு எனும் கௌரவ ஜனாதிபதியின் திட்டத்தினால் வழங்கப்பட்ட நெனசல எனும் எமது நிறுவனமானது சுமார் 3 வருடங்களை கடந்திருக்கும் நிலையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். 2007.01.06 ஆம் திகதி அன்று மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் கௌரவ W.D. ஜோன் செனவிரத்ன மற்றும் பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அவர்களால் எமது நெனசல உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அக்காலத்திலிருந்து இது வரை காலமும் பல வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பிட்டு சிலவற்றை கூற முடியூம். நெனசல மற்றும் எமது தனியார் நிறுவனமான Global College of Computer Studies இனால் இலவச ஆங்கிலப்பயிற்சி நெறியை தொடர்ந்து வந்தது முதலில் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் சுமார் 456 மாணவர்கள் இப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்துள்ளார்கள். மற்றும் 2007 தொடக்கம் இதுவரை காலமும் மாணவர்களின் அறிவூ விருத்திக்காவூம், மாணவர்களின் நலன் கருதியூம், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள், தொழிளாலிகள் யாவருக்கும் இணையம் மற்றும் கணனிக்கும் சேர்த்து மணித்தியாளமொன்றிற்கு சுமார் 30 ரூபா மாத்திரமே பெற்று வருகின்றது. இந்த வகையில் இந்நெனசல மூலம் பார பட்சமின்றி சகலரும் பயன்பெற்று வருகின்றனர்.

சுமார் 1 வருடத்திற்கு முன்னர் மஹ்ரூப் ரொஸ்மின் என்ற மாணவர் அமெரிக்காவின் நாஸாவிற்கு தெரிவாகியிருந்ததும் இந்த புத்தளம் நகரை வியப்பில் ஆழ்த்தியதும் எமது நெனசல மூலம் தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனால் இம்மாணவர் எம்முடன் எத்தொடர்புமற்றிருப்பது மிகவூம் மனவேதனைக்குறிய விடயமாகும். அவரது மின்னஞ்ஞல் மற்றும் சில புகைப்படங்கள் மாத்திரமே எஞ்சி இருக்கிறது.
து மாத்திரமின்றி  சென்ற வாரம் (24.06.2010) அன்று எமது புத்தளம் நகரின் சாஹிரா தேசிய கல்லுhரியின் (சாஹிரா படையணிவகுப்பு – Zahirian Parade) நடைபெற்றது. இம்முயற்சி இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதில் சாஹிராவின் பழைய மாணவர்கள் மற்றும் முன்னால் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் நகர சபை தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர். இம்முயற்சி பாரிய வெற்றியளித்தது. இவ் ஏற்பாட்டுக்குழுவில் புத்தளம் நெனசலயூம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எமது புதிய முயற்சியாக
Nenasala Institution of Computer & Language Studies எனும் நிறுவனத்தை ஸ்தாபித்து அதன் மூலம் பல இலவச வகுப்புக்களும் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் அரபு மொழிகளை கற்று கொடுப்பதே எமது பிராதான நோக்கமாகும்.
இம்முயற்சி தொடர இறைவன் அருள்புரியட்டும்.


 
  back...  
Home Page